உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்திருத்தொண்டர் புராணம்
என்று
வழங்குகின்றபெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்ததுபத்தாவது
பத்தராய்ப்பணிவார் சருக்கம்
முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார் புராணம்
செப்பலருந் தவமுடைய செம்மை யாளர்
சிறுகாலை மலர்வாவி திகழ மூழ்கி
யொப்பிறிரு நீறணிந்து நியதி யாற்றி
யோவாமே யைந்தெழுத்து முரைத்து மேன்மை
தப்பில்சிவா கமவிதியா லின்பா லன்பாந்
தன்மையா னன்மையாந் தகையா ரென்று
முப்பொழுதுந் திருமேனி தீண்ட வல்ல
முறைமையார் பிறவிதெறுந் திறமை யாரே.சிருட்டிகாலத்திலே அநாதிசைவராகிய சதாசிவமூர்த்தியுடைய சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்னும் பஞ்சவத்திரத்தினின்றுந் தோன்றிய கெள்சிகர், காசிபர், பாரத்துவாசர், கெளதமர், அகத்தியர் என்னும் பஞ்சருக்ஷி கோத்திரத்திலே ஜனித்த சிவப்பிராமணர்கள் ஆதிசைவரென்று சொல்லப்படுவார்கள். அவர்களுள்ளே சமய தீக்ஷை விசேஷதீக்ஷை, நிருவாணதீக்ஷை ஆசாரியாபிஷேகங்களைப் பெற்றவர்களே சர்வாதிகாரிகளென்றும், உத்தமோத்தம சிவாசாரியர்களென்றும், சிவாகமங்கள் செப்பும், பரார்த்தப் பிரதிட்டை பரார்த்த பூசைகள் செய்தற்கு அவர்களே உரியவர்கள் மற்றையர்கள் உரியர்களல்லர். அதனால் அவர்களே சிவாகம விற்பன்னர்களாகிக் கிருத கிருத்தியர்களாய் முப்பொழுதினுஞ் சிவலிங்கத்தை அருச்சிப்பார்கள். ஆதலால் அவர்களே முப்பொழுதுந் திருமேனி தீண்டுவாரென்று சொல்லப்படுவார்கள்.
¾¢ÕüÈõÀÄõ